Tuesday 8 March 2011

திருமணத்திற்கு முன் - திருமணத்திற்குப் பின்

(தி.மு.) திருமணத்திற்கு முன் (நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் தம்பதிகள் கதைத்தது): - 

அவன் : ஆமாம், இதற்காகத்தானே  நான் இத்தனை  நாளாய்க் காத்திருந்தேன்.

அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன் : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை.

அவள் : நீ என்னை விரும்புகிறாயா ?

அவன் : ஆமாம், இன்றும், என்றென்றும்.

அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன் : அதைவிட நான் இறப்பதே மேல்.

அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்.

அவள் : என்னை திட்டுவாயா ?

அவன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ? 

(தி.பி.) திருமணத்திற்குப் பின் (தம்பதிகள் கதைப்பது) -

கீழிருந்து மேலே படியுங்கள் 

No comments:

Post a Comment